அந்த பூமா தேவியோ பூமியை தன் தலையில் தான் சுமந்தால்
அனால் நீயோ முதலில் என்னை உன் வயிற்றில் சுமந்தாய்
பிறகு படுக்க உன் மடியை மெத்தை ஆக்கினாய்
பிறகு தோளில் தொட்டில் கட்டி வீதி உலா வந்தாய்
இப்பொழுதும் அன்றி எப்பொழுதும் உன் நெஞ்சில் என்னை சுமக்கிறாய்
அவ்வபொழுது உன் கண்ணீரிலும் என்னை சுமக்கிறாய் !!
அந்த பூமி தாயோ பூகம்ப தாயானாள் அவள் பொறுமை சலனமடைந்த போதிலும் உன் பொறுமை என்றும் நீங்கா புகழ் பெற்ற பொறுமை
இத்தனை சுமைகளையும் சுமை என்று எண்ணாமல் சுகமாக்கி கொண்டு
என் புன்னகையில் உன் ஆனந்தத்தை காணும் தாயே !!!
சுயநலத்திற்கு அப்பாற்பட்ட தாய் உள்ளமே கோவில் !!
No comments:
Post a Comment